திடீரென கொட்டி தீர்த்த கனமழை

சங்ககிரி: திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2024-06-18 14:01 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, தேவூர், மைலம்பட்டி, வட்ராம்பாளையம், காவேரிப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசியது.

பின்னர். காற்று,இடி மின்னலுடன் வானத்தில் வானவில் தோன்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்..

Tags:    

Similar News