மதுராந்தகம் பகுதிகளில் இடியுடன் கனமழை
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-06 15:10 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் கருங்குழி,மேலவலம்பேட்டை,படாளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் திடீர் என இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த நிலையில் இரவு 7 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது... நேற்றும், இன்றும் இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.