விருதுநகரில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-28 14:13 GMT

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 

 2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது

கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டடு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

மூன்றாம் நாளான இன்று சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்

மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். 

 அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் தினக்கூலி சம்;பளமாக பெற எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அரிதான மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதன் மூலம் சம்பாதித்து நமது பொருளாதார நிலையையும், சமூக மரியாதையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையை சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்து படிக்கும் போது, அங்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு. மேலும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகையும் நீங்கள் செலுத்தக்கூடிய கல்வி கட்டணத்தை விட அதிகமாகவே கிடைக்கின்றன. ஆகையால் நீங்கள் எந்த ஒரு செலவினமும் இல்லாமலும், பெற்றோர்களுக்கு கல்வி கட்டணம் குறித்த கஷ்டம் இல்லாமலேயே நீங்கள் படித்து முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இது குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை. உயர் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற கற்பனை இருக்கிறது. ஆனால் இது குறித்த வாய்ப்புகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை.

வழிகாட்டுதல் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அல்லது ஓரளவுக்கு விபரங்கள் தெரிந்து தேடக்கூடிய மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். எந்த துறைக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான மதிப்பெண்கள் என்ன அதற்கு எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று ஆராய்ந்து படித்தாலே போதும். மா

ணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமைபெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. அரசு உயர்கல்விக்கு பல நூறு கோடிகளை ஒதுக்குகிறது. 

இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை பெறுவதற்கு முதலில் மதிப்பெண்கள் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால், இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார். இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

 இந்நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நுழைவுத்தேர்வுகள், தேர்வுகளுக்கு தயார் செய்து எதிர்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில், கடந்தாண்டுகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேளாண்மை,

மருத்துவ படிப்பில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தாங்கள் எப்படி அரசு பள்ளியில் இருந்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு தேர்வு பெற்றார்கள் என்பது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Tags:    

Similar News