இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

Update: 2023-12-21 07:33 GMT

அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு 

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்வாா்கள்.இதனையொட்டி பக்தா்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். பக்தா்கள் வந்து, செல்லும் பாதை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கோயில் ஆணையா் முரளிதரன் கேட்டறிந்தாா். ஆய்வின் போது திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு ,திருப்பணிகள் இணை ஆணையர் ஜெயராமன், ஸ்ரீரங்ககோயில் இணை ஆணையர் மாரியப்பன் திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ் , மற்றும் சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News