தி.மலை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி விற்பனை:ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-20 15:50 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுக்கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவை மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 21 மற்றும் தொழிலாளர் தினத்தையொட்டி மே 1 ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News