சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஹோமம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி ஹோமம் நடைபெற்றது.

Update: 2024-02-01 04:54 GMT


சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி ஹோமம் நடைபெற்றது.


தமிழகத்தின் மிகவும் பிரசித்திபெற்ற சக்தி ஸ்தலங்களில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் ஆதி பீடமாகவும் பக்தர்களால் போற்றப்படுகின்ற சமயபுரம் சுயம்பு அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் வெளிநாடு, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் இக்கோவில் மாரியம்மனிடம் பிரார்த்தனை செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர்.

இந்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி ஹோமம் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையோடு தொடங்கிய விழாவில் தேவி ஆவாஹனம், மஹாசண்டி ஹோமம், திரவ்யாஹுதி, சுமங்கலி பூஜை, வடுக பூஜைடு மஹாபூா்ணாஹுதி, மஹா தீப ஆராதனை, மஹா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News