வீட்டு மனை பட்டா - 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-27 06:17 GMT

மனு அளிக்க வந்த பெண்கள் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோமாளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் வசித்து வரும் 100 க்கு மேற்பட்ட பெண்கள் வீட்டுமனை பட்டா இதுவரையில் எங்களுக்கு இல்லை என்றும், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருவதாகவும் இதற்கு முன்பு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து 100 க்கும் ஏற்பட்ட பெண்கள் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். திடீரென அதிக அளவு பெண்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளிக்க வந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது,
Tags:    

Similar News