நாமக்கல்லில் நாளை சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2024-06-24 12:20 GMT
குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் கேஸ் நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் “சமையல் கேஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 25)  பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும், சமையல் கேஸ் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கேஸ் விநியோகம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். கூட்டத்தில் மனுக்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News