அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் !
போதை பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டதை கண்டித்து, தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அதிமுக சார்பில் நேற்று, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
Update: 2024-03-15 12:26 GMT
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதோடு, போதை பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டதை கண்டித்து, தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அதிமுக சார்பில் நேற்று, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சேலையூர் - வேளச்சேரி பிரதான சாலை, சிட்லப்பாக்கம், அனகாபுத்துார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், அப்பகுதி அதிமுகவினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். ஆலந்துார் மண்டலத்தில் நங்கநல்லுார், எம்ஜிஆர் சாலையில் ஆலந்துார், கிழக்கு பகுதி கழக செயலர் பரணிபிரசாத் தலைமையில், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.