சேத்துப்பட்டு பேரூராட்சியில் மனித உரிமை தின வார்டு சிறப்பு கூட்டம்

Update: 2023-12-11 02:52 GMT

மக்கள் சபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேத்துப்பட்டு பேரூராட்சியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வார்டு சபா கூட்டம்18 வார்டுகளிலும் நடைபெற்றது. ஆட்சி மன்ற தலைவர் சுதா முருகன் வாடு சபா கூட்டத்தில் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் 3வது வார்டுவார்டு தனுஸ்ரீ நகர் பகுதி மக்கள் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் வார்டு கூட்டத்தில் மக்கள் கூறிய கருத்துக்களை ஏற்று படிப்படியாக அனைத்து பகுதிக்கும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் செயல் அலுவலர் ஆனந்தன், மூத்த உறுப்பினர் திமுக நகர செயலாளர் இரா. முருகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News