மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-31 06:29 GMT

கணவர் தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் திருமுருகன். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்த்தியில் இருந்த அவர் மதுவில் அரளி விதையை அரைத்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்று சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News