மனைவி உடல் நலம் பாதித்ததால் கணவன் தற்கொலை
தர்மபுரி மாவட்டம், கீழ் செங்கப்பாடயில் மனைவியின் உடல் நலம் சரியில்லாததால் மன உளைச்சலில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2024-04-12 02:44 GMT
தற்கொலை
தர்மபுரி மாவட்டம், கீழ் செங்கப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவருடைய மனைவி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் மன வேதனையில் இருந்த சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல்துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.