கணவர் மரணம் மனைவி போலீசில் புகார் !

கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார். போலீசார் வழக்கு பதிவு.

Update: 2024-02-20 06:12 GMT

 கணவர் மரணம் மனைவி போலீசில் புகார் !

சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி ராணி, 52; இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். துரைசாமி வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பதால், ராணி 3 குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் துரைசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் கணவர் துரைசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராணி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News