நாமக்கல் மாவட்டத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சியில் ஈடுபட்ட திமுகவினர்

நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்வை இல்லந்தோறும் திமுக சாதனைகளை விளக்கியும், ஒன்றிய அரசின் பாசிச போக்கினை எடுத்துரைத்தும் திண்ணை பிரச்சாரம் நாமக்கல்லில் மேற்கோள்ளப்பட்டது.

Update: 2024-02-27 05:52 GMT

திமுக கட்சியினர்

திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்வை இல்லந்தோறும் திமுக சாதனைகளை விளக்கியும், ஒன்றிய அரசின் பாசிச போக்கினை எடுத்துரைத்தும் திண்ணை பிரச்சாரம் நாமக்கல்லில் மேற்கோள்ளப்பட்டது. கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி ஆற்றல்மிகு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஸ்குமார் MP அவர்களின் ஆலோசனைப்படி , நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரத்தை திமுகவினர் பரப்புரை செய்தனர். இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் அம்மையப்பன், கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் கோட்டை ரவீந்திரன், கிழக்கு நகர செயலாளர் செ.பூபதி, கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் நாசர் பாஷா,13-வது நகர்மன்ற உறுப்பினர் பர்கத்துணிஷா, கிழக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கமலம்மாள்,13- வார்டு இளைஞர் அமைப்பாளர் அஜிஸ்,கிழக்கு நகர தொழில்நுட்ப அணி நிவாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News