போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடை திறப்பு விழா

திருச்சியில் போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடை கோலாகலமாக இன்று திறக்கப்பட்டது

Update: 2023-12-14 16:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாநகரில் NSB சாலையில் பிரம்மாண்டமான போத்தீஸ் சொர்ண மஹால் இன்று காலை கோலாகலமாக திறக்கப்பட்டது. போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் குத்து விளகேற்றி நகை கடையில் விற்பனையை தொடங்கினர்.

இங்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினங்களில் பல்வேறு வகையான டிசைன்களை பெண்களை கவரும் வகையில் நகைகள் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போத்தீஸ் சொர்ண மஹால் நிர்வாக இயக்குனர் எஸ் ரமேஷ் கூறும்போது , கடந்த 2021 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தொடங்கி தற்போது நான்காவது கிளையாக திருச்சியில் தொடங்க உள்ளோம்.

எங்களுடைய தங்கம் முதல் தரத்திலும், தரமான வேலைப்பாடுகள் அதேபோல தங்க விற்பனையில் மற்ற தங்க நகைகளுக்கு விட குறைந்த விலையில் தரமானதாக வழங்குகிறோம், தங்கம் என்பது ஆபரணம் என்பதை விட, அதனை ஒரு சொத்தாக நாம் மதிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் பங்கு மார்க்கெட், இடம் ஆகியவற்றின் மதிப்பை விட தங்கத்தின் மதிப்பு கூடிக் கொண்டே வருகிறது. வடநாட்டை விட தென்னிந்தியாவில் நகையின் மீது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையை ஈடேற்றம் வகையில் நாங்கள், மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளை விட குறைவான விலைக்கு, தரமான தங்க நகை விலை விற்பனை செய்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News