திருச்சிற்றம்பலத்தில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

திருச்சிற்றம்பலத்தில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-06 15:41 GMT

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கடையவீதியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, நெசவாளர் அணி சார்பில், கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை தலைமை வகித்து திறந்து வைத்தார்.  தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  ச.முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், ரூஸ்வெல்ட் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வீ.சௌந்தரராஜன் வரவேற்றார்.

நிறைவாக, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார். இதில், பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத், கம்பங்கூழ், கேப்பைக்கூழ், தர்பூசணி, முந்திரிப்பழம், வெள்ளரி, நுங்கு, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டன.

Tags:    

Similar News