ஈரோடு: புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

அரசு பள்ளியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய கட்டிடம் திறப்பு விழா

Update: 2023-12-08 07:33 GMT

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள , உத்தண்டிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியிடம் மனு அளித்தனர். இதனையடுத்து மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 நிதியிலிருந்து 18 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி திறந்து வைத்தார். இந்த்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News