மதுராந்தகம் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

மதுராந்தகம் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-05-01 08:56 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் குமார் அவர்களின் ஏற்பாட்டில் , பொதுமக்கள் தங்களை வெயில் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மதுராந்தகம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, நகர மன்ற தலைவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், பழ வகைகள், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.. இந்த தண்ணீர் பந்தலில் கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பொதுமக்களுக்கு நீர், மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்படும் என நகர மன்ற திமுக சார்பில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News