இந்திய வளர்ச்சியடைய மீண்டும் மோடி வேண்டும்: பாமக வேட்பாளர்

இந்திய வளர்ச்சியடைய மீண்டும் மோடி வேண்டும் என பாமக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-29 17:37 GMT

பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க‌.ஸ்டாலின் அவர்களை பாஜக தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்த கூட்டம் மயிலாடுதுறை நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களிடம் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பேசுகையில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால் மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் தான் பாரத பிரதமராக வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் ,

போட்டியிடும் நான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அந்த வகையிலேயே பல போராட்டங்களை நடத்தி வருகிறேன் . தொகுதியில் நிச்சயமாக வெற்றி அடைவேன் மத்திய அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஏதோ கரடு முரடானவர்கள் என்று கருத வேண்டாம் பாட்டாளி மக்கள் கட்சி என்பது பலாப்பழம் போன்றது பலாப்பழத்தின் தோல்கள் கரடு முரடாக இருப்பது போன்று எங்களது போராட்டங்கள்,

இருந்தாலும் அந்தப் பழத்தின் உள்ளே இருப்பது தேன் சுவையுடன் கூடிய இனிப்பான பழம்தான் அப்படி இனிமையாகவும் மக்களுக்கு பிரச்சனை என்றால் போராட கூடிய வல்லமையை பெற்றவராக நாங்கள் இருந்து வருகிறோம் நிச்சயமாக நமது கூட்டணி வெற்றி அடையும் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற ஒரே நிலைப்பாடோடு இணைந்து பணியாற்றி மயிலாடுதுறை தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருமை சேர்ப்போம் எனவும் கூறினார்.

Tags:    

Similar News