வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

தருமபுரி மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு.

Update: 2024-04-03 09:07 GMT

ஆய்வு

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக தருமபுரி மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்பட தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News