அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச வேட்டி தினம்

முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-06 06:17 GMT

 முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக அலுவலர் சிங்காரம் தலைமை தாங்கினார். இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீ வத்சன் முன்னிலை வகித்தார். உதவியாளர் சுபாஷ் வரவேற்றார். அலுவலக கண்காணிப்பாளர் பிரேமா வாழ்த்தி பேசி னார். உலக வேட்டி தினத்தை முன்னிட்டு மருத்துவமனை அலுவ லக பணியாளர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வந்த னர். பின்னர் அவர்கள் நெசவாளர்கள் வாழ்வு மலர அனைவரும் வேட்டி அணியவேண்டும் எனவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேட்டி அணிந்து பணிக்கு வருவது என முடிவு செய்தனர். முன்ன தாக வேட்டி அணிந்து வந்த அலுவலக பணியாளர்கள் பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கினர். முடிவில் இளநிலை உதவியாளர் ஆனந்தவளவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News