சமூகசேவகரிடம் பணம் கேட்டு மிரட்டல் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2023-12-07 07:56 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை பெரம்பூர், தேவஸ்தானம் , பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் நாள் தோறும், ஏராளமான ஆதரவற்றோர், முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ,தேடி சென்று உணவு வழங்கி வருகிறார். மனநலம் பாதிக்கபட்ட ,நிலையில் ரோட்டில் சுற்றி திரிபவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டி புத்தாடை வழங்கி, பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இவரை இவரது ஊரை சேர்ந்த நாகராஜ் என்பவர்  மேலும் 3பேருடன் சேர்ந்து பணம்கேட்டு மிரட்டி தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக ஆர்வலரின் சகோதரர் தனுஷ்கோடி மீதும் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். தங்கள்மீதே, பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், விரக்தியடைந்த சமூக ஆர்வலர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். 
Tags:    

Similar News