தீ விபத்தில் சிக்கிய போதை வாலிபர் பலி !

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

Update: 2024-04-01 09:33 GMT

வாலிபர் பலி

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு, பட்டரை தெருவைச் சேர்ந்தவர் சேகர், 60. இவரது மகன் திருவேங்கடம், 22. இவர் மீது காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிளஸ் 2 முடித்த திருவேங்கிடம், வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு பெற்றோரிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். இதையடுத்து, வீட்டிலிருந்த பெற்றோரிடம், நேற்று முன்தினம் இரவு மது போதையில் திருவேங்கடம் பிரச்னை செய்துள்ளார். இதனால், இவரது பெற்றோர், தங்களின் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நள்ளிரவு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த திருவேங்கடம் மூச்சு திணறி உயிரிழந்தார். நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த பெற்றோர், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்ற போது, திருவேங்கிடம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, அவரது தந்தை சேகர், காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News