85 வயது வாக்காளர்களுக்கு 2d படிவம் வழங்கல்!

புதுக்கோட்டையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 2D படிவம் வழங்கப்படுவதை தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.

Update: 2024-03-21 05:06 GMT

 புதுக்கோட்டையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 2D படிவம் வழங்கப்படுவதை தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில் உள்ள பகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 12D படிவம் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News