சிறையில் தூய்மைப்பணியாளர் பணியிடம் அறிவிப்பு

சிறையில் தூய்மைப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-19 12:30 GMT
மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்ட சிறை மற்றும் கொடைக்கானல் கிளைச் சிறையில் தலா ஒரு தூய்மைப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் பொதுப்பிரிவு-முன்னுரிமை, எஸ்.சி. -பெண்- முன்னுரிமையற்றது என்ற இன சுழற்ச்சிக்கு ஒதுக்கப்பட்டதாகும். முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை துாய்மைப் பணியாளர் பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பதவிக்கு நடைமுறையிலுள்ள பிபி 1 ஏ ரூ.15700 முதல் ரூ.58100 வரை என்ற ஊதிய விகிதத்தில் ஊதியம் மற்றும் பிற படிகள் பெற்று வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று ஜாதிச்சான்று மற்றும் பிற சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க என மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News