நெல்லை மாணவர்களுக்கு உதவிய ஜமாத்துல் உலமா சபை

நெல்லை மாணவர்களுக்கு ஜமாத்துல் உலமா சபை உதவியது.

Update: 2024-01-07 14:30 GMT

மாணவர்களுக்கு உதவிய ஜமாத்

நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்ததில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்களை நெல்லை ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று வழங்கினர்.

இதில் திருநெல்வேலி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஷேக் மீரான், அம்பை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் முபாரக் அஹ்மத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News