ஆற்காட்டில் ஜமாபந்தி - ஆட்சியர் பங்கேற்பு

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் வளர்மதி கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.

Update: 2024-06-22 08:08 GMT

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் வளர்மதி கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. திமிரி உள்வட்டத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம், குப்பம், புங்கனூர், வரகூர் பட்டணம், காவனூர், ஆனைமல்லூர், மேல்நாயக்கன் பாளையம், பாடி, நம்பரை, துர்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்சினைகள் குறித்து 98 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து அறிக்கை வழங்கிட தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார். பின்னர் நில அளவீடு செய்யும் சங்கிலிகள், நில அளவிற்காக வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார்.இதில் உதவி இயக்குனர் (சர்வே) பொன்னையா, தாசில்தார்கள் அருள் செல்வன், பாபு, ரூபி மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News