வடலூர் சத்திய ஞான சபையில் மார்கழி மாத ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞான சபையில் இன்று மார்கழி மாத ஜோதி தரிசனம் நடக்கிறது.;
Update: 2023-12-29 02:40 GMT
சத்திய ஞான சபை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாத ஜோதி தரிசனம் இன்று இரவு 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை நடைபெற உள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஈடுபட்டு வருகின்றனர்.