உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி
உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 16:11 GMT
கபாடி போட்டியில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணியம்பட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் காமன் கபடி குழு ஒன்றிணைந்து மூன்றாவது ஆண்டாக கபடி போட்டி நடைபெற்றது .
இந்த போட்டிக்காக தேனி, திண்டுக்கல், விருதுநகர், சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.
இந்த போட்டியை செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் கண்ணியம்பட்டி கவுன்சிலர் சின்னக்காமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கபடி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.