கச்சத்தீவு மீட்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்-அண்ணாமலை!

கச்சத்தீவு மீட்பது பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-02 00:34 GMT

கச்சத்தீவு மீட்பது பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை பீளமேடு பகுதியில் பாஜக தேர்தல் பணிமனை துவக்க விழா நடைபெற்றது.இதன் பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை என்றவர் திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் எனவும் அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது எனவும் கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசியதாகவும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை என்றார்.

இந்திய இறையாண்மை மீது திமுகவிற்கு நம்பிக்கை உள்ளதா? என கேள்வி எழுப்பியவர் ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக தான் என்றார்.தமிழக பாஜக கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளோம் என்ற அவர் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது எனவும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும் என்றார். கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரசும், திமுகவும் சேர்ந்து செய்த சதி என்றவர் கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் எனவும் கச்சத்தீவு மீட்பு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றார்.வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் வங்கதேச பிரச்சனையும் கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல என்றவர் சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார் என்றார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை என்ற அவர் கச்சத்தீவை தாரை வார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் மற்றும் திமுக மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றவர் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது எனவும் நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல என்றார்.கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன? என கேள்வி எழுப்பியவர் பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார் எனவும் அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்துள்ளதாக கூறியவர் நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றும் அன்று நாடாளுமன்றத்தில் இருந்து திமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார் என்ற அவர் கச்சத்தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி,ஒரு மத்திய அமைச்சர்,முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கச்சத்தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்துள்ளது எனவும் மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம் என்றார்.இலங்கையுடன் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது எனவும் இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான் எனவும் இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை என்றார். சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் என்றவர் ஆக்கிரமிப்புகளை ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டுள்ளோம் பாஜக அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை என்றவர் பிரச்சினைகளை திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார் என்றார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது எனவும் 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்துள்ளதாக கூறினார்.எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை என்றவர் காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News