கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-14 10:36 GMT

சிறப்பு மருத்துவ முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில், மாவட்ட சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. குத்தாலம் வட்டார மருத்துவ அலுவலர் கோபி தலைமையில், நடைபெற்ற முகாமை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, தோல் மருத்துவம் எலும்பு சிகிச்சை கண் சிகிச்சை, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும் இசிஜி, ரத்த நோய் கண்டறியும் ஆய்வகம், தடுப்பூசி செலுத்துதல் , போன்ற முகாம்களும் செயல்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு சோதனைகளை எடுத்துக் கொண்டனர்.

உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ,கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ,மேல் சிகிச்சை வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News