வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கலாநிதி வீராசாமி எம்.பி !

Update: 2024-07-18 14:48 GMT

வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிட்டு 4,97,333 வாக்குகளை பெற்று, 3,33,229 வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் மனோவை தோற்கடித்தார். வடசென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

இதனையடுத்து (17/07/2024) அன்று சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் மேற்கு பகுதியில், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் ஏற்பாட்டில், வார்டு 1,2,3,4,5,6 ஆகிய வட்டங்களில் வீதிவீதியாகச் சென்று வாக்காளர்களை கலாநிதி வீராசாமி சந்தித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தாா் .

இந்நிகழ்வில் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News