7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி தாளாளர் போக்சோவில் கைது..!

2ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்;

Update: 2024-02-17 16:34 GMT
2ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்

காஞ்சிபுரம் அருகே இரண்டாம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யபப்ட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் மானாம்பதி கண்டிகை பகுதியில் ஜூப்ளி சி.பி.எஸ்.சி. அகடாமி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியைச் சேர்ந்த பாதர் சகாயராஜ்( 52) என்பவர் பள்ளியில் தாளாளராக உள்ளார்.

Advertisement

இந்நிலையில், அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவருக்கு, சகாயராஜ் பாலியல் தொந்தரவு தந்க்துள்ளார். பள்ளி சிறுவனின் செயலில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியின் தாளாளர் சகாயராஜ் தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்து துன்புறுத்தி வருவதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் சைல்ட் லைப் லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி,விசாரணை மேற்கொண்ட பெருநகர் போலீசார் பள்ளி தாளாளர் சகாயராஜை 'போச்சோ' சட்டத்தில் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சகாயராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News