குஷ்பு - வை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-13 03:36 GMT
கன்னியாகுமரியில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு சுமார் 1.15கோடி மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்திட்டமாக மாதம் ரூ 1000.  வழங்கி வருகிறது. இந்த   திட்டத்தில்  பயன் பெறும்  இல்லதரசி மகளிர்களை இழிவுவாக பேசிய பாஜகவின் நிர்வாகியும், நடிகையுமான  குஷ்புவை கண்டித்து கன்னியாகுமரி இரயில் நிலைய சந்திப்பில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   

 மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  ஜெனஸ் மைக்கிள் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்  கலந்து கொண்டார்.  மற்றும் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, குமரி பேரூர் கழக செயலாளர் குமரி ஸ்டீபன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் , மற்றும் ஒன்றிய , பேரூர் கழக நிர்வாகிகள்  மகளிரணியினர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News