கனரக வாகனங்களுக்கு கடும்  கட்டுப்பாடு விதிக்க வேண்டும் - விஜய் வசந்த்

கனரக வாகனங்களால் விபத்து என எம்பி விஜய் வசந்த் அறிக்கை

Update: 2024-02-22 14:10 GMT
விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணம் ஏற்படும் மரணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறினேன். இந்த சாலை விபத்துக்கள் பெரும்பாலும் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படுவதை சுட்டி காட்டினேன்.

மேலும் நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் இதனை குறித்து புகார் தெரிவிப்பதையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். எனவே கனரக வாகனங்களை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன் பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு வெளியிட்டது. இதனை நான் நன்றியுடன் வரவேற்கிறேன். ஆனால் இந்த கட்டுப்பாட்டை இனியும் கடுமையாக்க வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News