செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலை விரிவாக்க பணி துவக்கம்! 

செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் ரூ.4 கோடியில் விரிவாக்க பணி துவங்கியது. 

Update: 2023-12-11 13:46 GMT

செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் ரூ.4 கோடியில் விரிவாக்க பணி துவங்கியது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்துங்கநல்லூரில் இருந்து வசவப்பபுரம் சாலை ஒருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து ரூ.4 கோடியே 45 லட்சம் செலவில் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒருவழிச்சாலை, இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதற்கான தொடக்க நிகழ்ச்சி விட்டிலாபுரத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ராஜாத்தி, பணி மேற்பார்வையாளர் பத்மகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News