பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு

முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

Update: 2024-03-04 12:25 GMT

அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு

கரூர் மாவட்டம் மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மணல்மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் அடையாளம் தெரியாத 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக அப்பகுதி விஏஓவுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற அவர், அடையாளம் தெரியாத முதியவர் உடல் கிடப்பதை உறுதி செய்த அவர், அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News