திமுகவில் இணைந்த கேரள மாநிலத்தவர்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Update: 2024-02-19 06:46 GMT
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட திமுக செயலாளர் ரிஜூராஜ் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட செயலாளர் கிரண் ஹரி ஆகியோர் தலைமையில் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த ஜேக்கப், ஜோனு, சரத், டானி, ஆல்வின், டோனி ராஜேஷ் தாஜுதீன் அணில் கிரண் சுபின் சிஜோ, பரமசிவன், ஐசன், ராமலட்சுமி, பினு, ரிஜிஸ், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் 25 நபர்களுக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.