அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி

மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேலை வாய்ப்பு பயிற்சி.

Update: 2024-02-28 10:57 GMT

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை சார்பில் அனைத்து துறை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை வளர்த்துகொள்ள பயிற்சி வகுப்புகள் மூன்று பிரிவாக நடைபெற்றது. முன்னதாக மின்னணுவியல் விரிவுரையாளர் மூர்த்தி வரவேற்றார்.

கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். தனியார் நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பினை ஜேசி, அமைப்பைச் சார்ந்த முகம்மது பாஷா விளக்கினார். அரசுப் பணிக்கு செல்வோருக்கான வழிகாட்டுதல்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலர் பிரபு விளக்கினார், தொழில் முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை பூபாளம் நிறுவன மேலாளர் கெüசிக் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.

இதில் கல்லூரி மாணவ மாணவியர் பலர் கலந்துக்கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மின்னணுவியல் விரிவுரையாளர் ஏழுமலை செய்திருந்தார்.

Tags:    

Similar News