செயிண்ட் பால் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

செயிண்ட் பால் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சண்முகவேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-01-20 13:40 GMT

முன்னாள் மாணவருக்கு பாராட்டு 

சேலம் மரவனேரியில் செயிண்ட் பால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜான்சன் நண்பர்கள் கால்பந்து குழு சார்பில் கடந்த 4 நாட்களாக கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளி முன்னாள் மாணவரும், மாவட்ட கைப்பந்து கழக செயலாளருமான சண்முகவேலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் வன அலுவலர் பெரியசாமி, நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சண்முகவேலுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் பிரபு தலைமை தாங்கி பேசினார். அப்போது பள்ளி முன்னாள் மாணவர் சண்முகவேல் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக உள்ளார். மேலும் கைப்பந்து போட்டியில் பல வீரர்களை உருவாக்கி வருகிறார் என்று கூறினார். விழாவில் என்ஜினீயர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News