திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு

திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-03-01 16:18 GMT

போலீசாருக்கு பாராட்டு

ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27ம் தேதியன்று ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 14,3/4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் டவுன் டிஎஸ்பி உட்கோட்ட தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், டவுன் கிரைம் எஸ்ஐ பூபாலன் மற்றும் தலைமை காவலர் காதர் மைதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் உதவியுடன் தமிழரசு(23)என்ற நபரை பிடித்து விசாரணை செய்ததில்,

அவரிடமிருந்து ரூ.4,00,000 மதிப்பிலான நகைகளையும் இருசக்கர வாகனத்தையும் மீட்டுகைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். திருட்டு வழக்கில் விரைவாக குற்றவாளியை கண்டுபிடித்த தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் போலீசார்களை எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து எஸ்பி ஜவகர் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News