மாநில இரட்டையர் இறகு பந்து தரவரிசை முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில இரட்டையர் இறகு பந்து தரவரிசை முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

Update: 2024-02-06 11:03 GMT


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில இரட்டையர் இறகு பந்து தரவரிசை முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு வழங்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்1.2.2024. முதல் 7.2.2024 வரை விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகின்றன. 2023_2024 கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டி புதுக்கோட்டை ஜேஜே கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நடை பெற்று வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துபல்வேறு வகையான போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்கள்அந்தப் போட்டியில் சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவி பங்கேற்றார்.

இறகு பந்து போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் போட்டியில் 9 ம் வகுப்பு சி பிரிவில் படிக்கும் மாணவி RD திவ்யா மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு நான்காம் இடம் பிடித்தமைக்காகவும் மாநில இரட்டையர் இறகு பந்து தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தமைக்காகவும் மாணவியை பள்ளியின்" செயலர் ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான், புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் , வாழ்த்தினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் சித" சேகர்" பயிற்சியாளர்" "முனைவர் ராமன் '" பள்ளியின் ஆசிரியர்கள்" அலுவலகப் பணியாளர்கள்' மாணவ' மாணவிகள்" பெற்றோர்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் க. முத்துராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தினார்கள்,.

Tags:    

Similar News