மாணவிகளுக்கு பாராட்டு

பரணி பார்க் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-10 12:27 GMT
பரணி பார்க் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் பரணி பார்க் கல்வி குழுமங்களில் ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பள்ளிக்கு பெற்றோருடன் மாணாக்கர்கள் வருகை புரிந்தனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி சாதனா, 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி (மற்றொரு) சாதனா 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவி ஆகியோருக்கு, பள்ளியின் அலுவலகத்தில் பள்ளியின் தாளாளர் S.மோகனரங்கன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் செயலாளர் பத்மாவதி பதக்கங்களை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். பள்ளியின் முதன்மை முதல்வர் C. ராமசுப்பிரமணியன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News