மாநில சதுரங்க போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு!

மாநில அளவில் ஆன சதுரங்க போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கமூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.

Update: 2024-02-15 05:50 GMT

மாநில சதுரங்க போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவில் ஆன சதுரங்க போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கமூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் திருக்கோக ர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் கே.லோகித் கலந்து கொண்டு மாநில அளவில் கோப்பையை வென்று சான்றிதழ் பெற்றார். இதேபோல புதுக்கோட்டை மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவில் ஆன சதுரங்க போட்டியில் மாணவர்கள் குருநாத், கனிஷ்கா மற்றும் லோகித் ஆகியோர் மாநில அளவிலான பரிசுகளை பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். இவர்களை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கமூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சதுரங்க ஆசிரியை லலிதா ஈஸ்வரி உடன் இருந்தார்.
Tags:    

Similar News