எடப்பாடி பழனிச்சாமி 27ஆம் தேதி குமரி வருகை

கன்னியாகுமரியில் வருகின்ற 27ம் தேதி அதிமுக பிரச்சாரத்திற்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Update: 2024-03-23 08:53 GMT
பந்தல் கால் நாட்டு விழா

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் என்பவரும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ராணி என்பவரும் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகிற 27ஆம் தேதி குமரி மாவட்டம் வருகிறார்.

அவர் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதயொட்டி நாகராஜா திடலில் பந்தல் அமைப்பதற்கான கால் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பசிலியான் நசரேத், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் ராணி, மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News