அரவக்குறிச்சியில் குருத்தோலை ஞாயிறு கூட்டு பிரார்த்தனை

அரவக்குறிச்சியில் குருத்தோலை ஞாயிறு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2024-03-24 15:53 GMT

கூட்டு பிராரதனையில் கலந்து கொண்டவர்கள் 

 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சவேரியார் ஆலயத்தில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஜெரால்டு தலைமையில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி திருநாளை முன்னிட்டு பங்கு மக்கள் பங்கேற்ற கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

தவக்காலத்தில் ஆறாவது வாரத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு ராஜா பட்டம் வழங்குவது வருடம் தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இன்றும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பங்கு மக்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த கூட்டு பிரார்த்தனையில் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News