வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயம்!

திருப்பத்தூர்முனீஸ்வரன் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-21 04:23 GMT

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்முனீஸ்வரன் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி படுகாயம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி புருஷோத்தமன் வயது 35 இவர் தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி செல்லும் பொழுது முனீஸ்வரன் கோயில் அருகாமையில் அடையாளம் தெரியாத வாகன மோதி படுகாயம் அடைந்தார்.

அப்பகுதியில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்த புருஷோத்தமனை 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதை குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News