கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
செங்கம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 15:41 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஓரவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), கூலித் தொழிலாளி. மணிகண்டன் சமீபத்தில் நடைபெற்ற அவரது அக்காள் வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது சீர்வரிசை ஏதும் செய்யவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.