நில அளவிட்டாளர்கள் போராட்டம்

தஞ்சையில் பெண் நில அளவை ஊழியரை தாக்கிய குண்டர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-04 16:17 GMT
ஆர்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பவ்யா என்ற பெண் நில அளவிட்டாளர் நில அளவை செய்ய சென்றபோது முருகானந்தம் என்பவர் அவரை ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடு கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்தும் சம்பந்தப்பட்ட முருகானந்தத்தை குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில அளவீட்டாளர் அலுவலக ஒன்றிப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முறையாக புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கோரி அரசை வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News