திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண் சரிவு

திருத்தணி முருகன் கோயில் வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-05 11:03 GMT

திருத்தணி முருகன் கோயில் வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தொடர்ச்சியாக மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மலையில் இருந்து வரும் தண்ணீர் மலையடிவாரத்தை சென்றடைந்து வருகிறது. இதனால் மண் பகுதி இலகுவாக மாறி மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 20 அடி தூரத்திற்கு சாலை தடுப்பு சுவர்களும் இடிந்தது. மேலும் மண் சரிவு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முருகன் கோயிலுக்கு கனரக வாகனங்கள் தடைவித்துள்ளது திருக்கோயில் நிர்வாகம்.

இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News